- ஆண் ,27,
Higher Secondary,தனியார் - ஆண் ,33,
Higher Secondary,தனியார்
- ஆண் ,28,
Diploma, - ஆண் ,27,
Bachelors - Others,சுயதொழில்
- ஆண் ,26,
Legal,சுயதொழில் - ஆண் ,33,
Ph.D,
- ஆண் ,26,
Masters - Engineering,அரசுப்பணி - ஆண் ,23,
Diploma,தனியார்
"
சுயமரியாதைத் திருமணம் என்பதன் முக்கியத் தத்துவம் கூட்டு வாழ்க்கையில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமோ, உயர்வு தாழ்வோ இல்லை என்பதும், சகல துறைகளிலும் சம சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்பதுமேயாகும். மேலும் அர்த்தமற்றதும் பொருத்தமற்றதுமான சடங்குகள் வேண்டாம் என்பதும் அநாவசியமான அதிகச் செலவும், அதிகக் காலக்கேடும் இருக்கக் கூடாது என்பதும்தான் சுயமரியாதைத் திருமணத்தின் முக்கியத் தத்துவமாகும்.
சுயமரியாதைத் திருமணத்தில் ஜாதி, வகுப்பு, குலம், கோத்திரம், ஜோதிடம் என்பவைகள் கவனிக்கப்படாமல், மணமக்களுடைய யோக்கியதாம்சங்களையே கவனித்துப் பார்க்கப்படுகின்றது.
- தந்தை பெரியார்
"
தமிழர் தலைவர் அவர்கள், தந்தை பெரியாரின் தத்துவங்களான பெண்ணுரிமை, பெண் விடுதலை, விழிப்பற்ற பெண்களிடையே விழிப்புணர்ச்சியை ஊட்ட மகளிர்க்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து வருவதோடு மட்டுமல்லாமல் முற்றிலும் மகளிராகவே திருமண நிலையங்களை நடத்திட வாய்ப்பையும் தந்துள்ளார்கள்.
இத்திருமண நிலையத்தின் முக்கிய செயல்பாடுகளாக ஜாதி மறுப்புத் திருமணம், சுயமரியாதைத் திருமணம், விதவைத் திருமணம், கணவரால் கைவிடப்பட்ட பெண்ணுக்கு மறுமணம், உடல் ஊனமுற்றோர்த் திருமணம், சட்டங்களுக்கு உட்பட்ட காதல் திருமணம், வாய்ப்புள்ள இடங்களில் சிக்கனத் திருமணம் முதலிய திருமணங்கள், சீர்திருத்த முறைப்படி செய்து வைக்கப்படுகின்றன. ஜாதகம், சோதிடப் புரட்டுக்கு இங்கு இடமில்லை. மணமக்களுக்கு ஏற்ற வயது, படிப்பு, தொழில் இவற்றுக்கே முதலிடம்.
விண்ணப்பப் படிவங்களைப் பெற்று சரியான துணைவரையோ, துணைவியையோ தேர்ந்தெடுத்து முகவரியினைக் கொடுத்துதவும் முகவராகவும் செயல்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் தங்கள் மனுவைப் பதிவு செய்து கொண்ட பிறகு அடிக்கடி நிலையத்துடன் நேரில் தொடர்பு கொண்டு பொருத்தமான மணமக்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.
விண்ணப்பத்தைப் பதிவு செய்து கொண்ட நாளில் இருந்து 180 நாட்கள் வரையில் விண்ணப்பதாரர்கள் நிலையத்துடன் தொடர்பு கொள்ளவில்லையானால் அவர்களுக்குத் திருமணம் நடந்து இருக்கலாம் என்று கருதி அவர்களுடைய மனுவை தள்ளுபடி செய்துவிட நேரிடும்.
மாநாடுகளில் திருமணம் செய்துகொள்ள விரும்புவோர், மாவட்ட திருமண நிலையத்தின் மூலம் முன் அனுமதி பெறவேண்டும்.